search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணத்தை ஒப்படைத்த தொழிலாளி"

    திருப்பூரில் நடுரோட்டில் கிடந்த ரூ.2 லட்சம் பணத்தை, நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த தொழிலாளியை போலீசார் பாராட்டினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). பனியன் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது, வழியில் இருந்த, டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்ற போது நடுரோட்டில் ஒரு கவர் கிடந்தது. அதைப்பார்த்து சந்தேகம் அடைந்த செந்தில்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கவரை எடுத்து பிரித்து பார்த்தார். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. பணத்தை கண்டெடுத்தது குறித்து திருப்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணத்தை ஒப்படைக்குமாறு கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து ரூரல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனிடம், பணம் இருந்த கவரை செந்தில்குமார் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவரை பெற்று பணத்தை எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.2 லட்சம்இருந்தது.

    நடுரோட்டில் கிடந்த பணத்தை, நேர்மையுடன் போலீசிடம் ஒப்படைத்த, செந்தில்குமாரை போலீசார் பாராட்டினர். மேலும், அவருக்கு பரிசு வழங்கி கவுரவப்படுத்த, போலீசார் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு, பரிந்துரைத்தனர்.

    பணத்தை கண்டெடுத்த செந்தில்குமார் கூறும்போது, யாரோ உழைத்து சம்பாதித்த பணம். தவறவிட்டனர் என்பதற்காக நான் வைத்துக்கொள்வது நியாயமில்லை. இதனால் பணத்தை போலீசில் ஒப்படைத்தேன் என்று கூறினார். ரூ.2 லட்சம் தவற விட்டவர்கள் உரிய ஆதாரங்களை திருப்பூர் ரூரல் போலீசில் காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.
    ×